Saturday, March 15, 2008
சந்திப்புகள் அரிதானவை.....
உனக்கும் எனக்குமான
சந்திப்புகளில்
தண்டவாளங்களுக்குப் பக்கத்தில்
விட்டுப்போன கொலுசின் ஓசை தேடி
ஒவ்வொரு முறையும்
ரயில் போன பிறகும் பார்கிறேன்!
லெவல் கிராசிங்கில்
பேருந்து ஜன்னலில் இருந்து
எட்டிப் பார்த்து போகும்
உன் முகம் பார்க்க வேண்டி
என் மிதிவண்டி மிதிப்பட்ட நாட்களில்
உன் சிறகுகள்
பனியில் நனைந்திருக்கும்.....
என்பதுகூட தெரியாமல் பார்த்துவிட்டு போகிறேன்!
உனதேயான வாசிப்புகளில்
எனது பெயரின் வாசனை
ஒருவேளை இம்சைப்படுத்தி இருக்கலாம் உன்னை....
உனது ஞாபகமும்
உன் ஈரம் தொட்ட கூந்தலசைவும்
எனக்குள் மூட்டிய தீயில்
குளிர்காய்ந்து கொண்டிருக்கலாம் நீ
என்பதான என் புரிதல்
அந்நியப்படுத்தவே செய்திருக்கிறது
ஒவ்வொருமுறையும்
என்னிடமிருந்து உன்னை......
Subscribe to:
Post Comments (Atom)
-
வீதியில் இருந்து அன்னியப்பட்டிருந்தது அந்த அறை நம்மை இணைத்த நம் வீட்டைப்போல்! பழகிய சாலை பார்த்த முகங்கள் அடையாளங்களை வைத்தே அடைந்துவிடுகிறோ...
-
ஒருவேளை நீ வாசிக்காத ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரின் வாசிப்பில் உயிர்ப்பித்திருக்கலாம் இந்த கவிதை.....! உனக்காகஎழுதியதை பிறர் வாசிக்கிற அவ...
No comments:
Post a Comment