Friday, July 25, 2008

இருப்பதாக எதையும் .....



எப்போதும்
நிகழ்வதில்லை
இருப்பினும்
நிழலாக போகும் சுவட்டை
தவிர்ப்பதற்க்கில்லை......


ஆரம்பிக்கிற
எழுத்தின் வளைவில்
உட்க்காரும் மனசு
நாற்காலி தேடும்
இனிப்பை
புறம்தள்ளும் வாழ்க்கை
கனவில்
எறும்பு மொய்த்தப்படி சிரிக்கும்....

ஒருகை மூடி
மறுகை நீட்டுகிற
திமிரின்
உச்சபட்சம்
அழவைக்கிற செயலில்
மும்முரமாய் இருக்கும்....

வரும்போதும்
போகும்போதும்
இருப்பதாக எதையும்
சொல்லிக்கொள்ளாத சமயம்
பட்சியாக மாறி
எச்சமிடலாம்
நிகழ்கால மானுட சிலைகளின் மேல்!

No comments:

neelam enbathu song