Friday, July 25, 2008

இதயம் பேசட்டும்.....

மழை போர்த்தும்
குளிர் ஆடையுடன்
உள் நுழைகிறாய்.....


ஈரம் லேசாய்
கோலங்கள் கிறுக்க
மனதாழ்வாரத்தின்
ஜன்னல்கள் திறக்கிறேன்....


எதிரெதிர் புறமாய்
நின்றபடி
அலசிக்கொள்ள
காத்திருக்கிறது
நமது இடைவெளி ...


எப்போதுமே
உரைப்பதுஎதுவாயினும்
உதடுகளை முன் நிறுத்தும்
வழக்கத்தை கட்டி
காப்பாற்றுகிறோம்


இதயம் பேசினால் என்ன
மௌனித்தால் என்ன
வார்த்தைகள் புரியாதபோது........

No comments:

neelam enbathu song