Monday, July 28, 2008

இருப்பின் அவசியம்.......


நீண்ட பிரயாணத்தில்
குறைந்திருந்தது
உலகின் நீளம்......

உதிரும்
ஒரு சிறகில்
வெளிப்பட்டது
பறவையின் வரலாறு....

நங்கூரம்
இட்டப்பிறகுதான்
காற்றுக்கு
ஈடுகொடுக்க முடிந்தது கப்பல்....

மின்தடை
வருகிறபோதுதான்
உணரமுடிகிறது
இருப்பின் அவசியம்!

நிழலை
தொட்டுச்சென்ற பகலில்
இருட்டின் கைரேகை .....

நிஜமாகவே
உப்புக்கரிக்கிறது கண்ணீர்......
-ஆனந்தமாய் அழுகிறபோதும்!

No comments:

neelam enbathu song