Thursday, August 14, 2008

ஆகவே சுதந்திரம்.......



உதிரும்
இலை-


நிலம் தொடும்
நிழல்-


கவிதை
கிறுக்கும்
இறகு-


மேகம்
தொலைத்த
மழைத்துளி-


கயிறு
அறுக்கும்
காளை......


இன்னும்
ஒட்டாமல்
உருண்டுச்செல்லும்
நீர்த்துளி....



பம்பரம் சுழல
அமைதியாய்
சாட்டை!


சுவர் தொட்ட
விதை
சொல்லாமல்
சொல்கிறது
விருட்சம்
சுதந்திரமாய் சுவாசித்தபடி...!


குடைப்பிடிக்காத
நிழல்
எப்போதும்
வேர்த்துப்போனதாய்
சொல்லிக்கொள்வதில்லை......

No comments:

neelam enbathu song