Wednesday, September 24, 2008

சொல்லத்தான் நினைக்கிறேன்....!


கடைசியாக
தன் அப்பாவின்
சட்ட்டைப்பையில்
எடுத்துக்கொண்ட பேனாவில்
கிறுக்கலை தொடங்கியிருந்தது
அந்த குழந்தை!


விடைப்பெற்று
கீழிறங்கிய நேரம்
நீ ஜன்னல் வழியே
தலைநீட்டி ஏதோ பேசினாய்....


புரிந்தும் புரியாமலும்
தலையாட்டிய என்னை
வினோதமாக
பார்த்திருக்கவேண்டும்
அந்த தாவணிப்பெண்...!


முதல் பாதி
முடிந்த நிலையில்
வேண்டாவெறுப்பாய்
கடாசிவிட்டு
வண்டி ஏறினான்
அந்த ஜீன்ஸ் இளைஞன் !


பரோட்டாக்கடையில்
இன்னும்
அதிவேகதாளகதியில்
கரண்டிகள்
மோதிக்கொண்டிருந்தன


நீயும்
காதுகளில்
மாட்டிக்கொண்டிருக்கும்
ஹியர்போன் தாண்டி
கேட்டிருக்க வாய்ப்பிருக்கலாம்....


ஊருக்கு போனதும்
கடிதம் போடு
என்பதான
சம்பிரதாய வார்த்தையில்
ராத்திரி உன்னை
ஒரு சின்ன மின்மினியாய்
கிளப்பிக்கொண்டு
இடம்பெயர்ந்தது
செல்போன் சிணுங்கலாய்!


அடுத்த முறை
வரும்போது
ராத்திரிகளில் பயணிப்பதை
தவிர்க்க சொல்லவேண்டும்


ஒரு அடர்ந்த இருட்டுக்குள்
உன்னை கொடுத்துவிட்டு
தனியாக நடக்கிறேன்
மேன்ஷன் நோக்கி!

Wednesday, September 10, 2008

காணாமல் போதல்....!

வழிதலும்
வழிதல் நிமித்தமும்
இல்லாமல் உருவான
சிநேகத்தின் கடைசிநாள்...
எனக்கான பில்லையும்
நீயே கொடுத்திருந்த
அற்புதமான தருணத்தில்தான்
அது நிகழ்ந்தது!
ஓடிப்போயிருந்த
கோகிலாவிற்காக
சோகம் வாசித்த
உன் தெரு ரோமியோக்களை
தாறுமாறாய் வாரிக்கொண்டிருந்தாய்.....
அடுத்த மாத வீடுமாறுதலும்
யாரோ ஒருவரின் வலைத்தளத்தில்
கண்ட பின்னூட்டத்தையும்
கிண்டலடித்தபோதுதான்
இடறிவிட்டிருக்க வேண்டும் நான்!
உன் வண்டியின்
பின்னுருக்கையில்
சிதறியிருந்த மல்லிகைபூவை
தட்டிவிட்டபடி பேசினாய்
கடன் வாங்காத வார்த்தைகளுடன்....
முகம் தெரியாத
அந்த பெண்ணின்
அத்தனைத் திட்டுகளுக்கும்
சொந்தக்காரனாகிப்போனான்
அந்த முகம் தெரியாத அவன்!
ஒருவேளை
இங்கு தொடங்கியிருக்கலாம் ....

தொலைதலை
முன்னிருத்தியே செல்கிறோம்
ஒவ்வொருமுறையும்
கூடுதல் ப்ரியங்களுடன்!

Tuesday, September 9, 2008

ஒரு வயலின் ஊமையானது.......!


வயலின் தூரிகை
தீட்டிய ஓவியம்
குன்னக்குடி.....


காதுகளை
கௌரவப்படுத்தியது
உன் இசை!

பேசிப்போனதில்
சிதறும் வார்த்தைகளாய்
உன் புன்னகை!


இசையால்
ஆடைக்கட்டுவார்கள்
நீ மட்டும்தான்
ஆடை நெய்தாய்!


உன் கச்சேரிகளில்
உதடுகளை பொருத்தியிருப்பாய்
உன் வயலினுக்கு....

ராகங்களை மொண்டு
டம்ப்ளர்களில்
விநியோகிப்பாய்....


"எந்தரோ மகானுபாவலு"வும்
வாசித்தது உன் வயலின்....
"லாலாக்கு டோல்டப்பிமா"வுக்கும்
வளைந்துகொடுத்தது உன் வயலின்!


பதினோராவது
விரலாகிப்போனது
வயலின்!
எட்டாவது
சுரமாகிப்போனது
உன் பெயர்!
ஒன்பதாவது
திசையாகிப்போனது
உன் ஊர்!


களத்துமேட்டின்
கனத்த
நெருஞ்சிபூக்களுக்கு
மத்தியில் இருந்து
எழுதுகிறேன்.....

எழுந்துவா
அனாதையாய்
அழுதுக்கொண்டிருக்கிறது
உன் வயலின்
கண்ணீர்த்துடைக்க
விரல்கள் இல்லாமல்!!

Friday, September 5, 2008

மறப்பதில்லை யாரும்!!!!!!!!!!!!!!


கணக்கு எடுக்கும்
கனகா டீச்சருக்கு
காச நோயாம்!
பி.டி.மாஸ்டர் டேவிட்டுக்கு
போன மாசம்தான்
கேன்சர் ஆப்பரேசன் முடிந்ததாம்.....

தமிழய்யா தங்கவேலுக்கு
சக்கரைநோயால்
இடது காலைஎடுத்து விட்டார்களாம்.....

ஹெட்மாஸ்டர் ராமசுப்ரமணியத்தை
மனநலமருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்களாம்....
-நோயுடன்
அவதிப்படுவதாகவே
சித்தரிக்கும் நண்பர்கள்
ஆசிரியர் பணிக்கு
விண்ணப்பங்களை
நிரப்பிக்கொண்டிருப்பதாக கேள்வி!

இருந்தாலும்
சொல்ல மறப்பதில்லை
வெளிநாடுகளில்
பேரன் பேத்திகளுடன்
வீடியோகேம் விளையாடும்
ஆசிரியர்களையும்!

நிறங்களின் அவசியம்!


பிரம்புடன் உள் நுழையும்
ஆசிரியர்களை விட
கனவுகளுடன் வரும்
மாணவர்களையே பிடித்திருக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கு.....


ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்
சில மரங்கள்
வியர்த்துக்கொண்டிருக்கலாம்
வீட்டுப்பாடம் எழுதாத
மாணவர்களின் விரல்கள்
நிழலுக்கடியில்!


பட்டப்பெயர்கள் வைக்கும்
மாணவர்களைவிட
பட்டம் பெரும் மாணவர்களை
மறந்துவிடுவதுண்டு
பல ஆசிரியர்கள்........


ஜாமென்ட்ரி பாக்ஸின்
உள்ளிருக்கும் இறகில்
காதுகுடைகிறது
ஒவ்வொரு பள்ளிக்கூடமும்.....


உதிரும் இறகின்
வலித்தெரியாமல்
பறக்கவே செய்கின்றன எப்போதும்!


எல்லா வண்ணங்களையும்
செலவழித்த பிறகுதான்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது
நிறங்களின் அவசியம்!


வானவில் வரையும்
இறகின் மிச்சத்தில்
உதிரலாம்
வண்ண சாக்பீஸ் துகள்கள்.......!

நிறங்களின் அவசியம்!

பிரம்புடன் உள் நுழையும்

ஆசிரியர்களை விட

கனவுகளுடன் வரும்

மாணவர்களையே பிடித்திருக்கிறது

பள்ளிக்கூடங்களுக்கு.....


ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்

சில மரங்கள்

வியர்த்துக்கொண்டிருக்கலாம்

வீட்டுப்பாடம் எழுதாத

மாணவர்களின் விரல்கள்

நிழலுக்கடியில்!


பட்டப்பெயர்கள் வைக்கும்

மாணவர்களைவிட

பட்டம் பெரும் மாணவர்களை

மறந்துவிடுவதுண்டு

பல ஆசிரியர்கள்........


ஜாமென்ட்ரி பாக்ஸின்

உள்ளிருக்கும் இறகில்

காதுகுடைகிறது

ஒவ்வொரு பள்ளிக்கூடமும்.....


உதிரும் இறகின்

வலித்தெரியாமல்

பறக்கவே செய்கின்றன எப்போதும்!


எல்லா வண்ணங்களையும்

செலவழித்த பிறகுதான்

தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது

நிறங்களின் அவசியம்!


வானவில் வரையும்

இறகின் மிச்சத்தில்

உதிரலாம்

வண்ண சாக்பீஸ் துகள்கள்.......!

neelam enbathu song