Friday, September 5, 2008

நிறங்களின் அவசியம்!


பிரம்புடன் உள் நுழையும்
ஆசிரியர்களை விட
கனவுகளுடன் வரும்
மாணவர்களையே பிடித்திருக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கு.....


ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்
சில மரங்கள்
வியர்த்துக்கொண்டிருக்கலாம்
வீட்டுப்பாடம் எழுதாத
மாணவர்களின் விரல்கள்
நிழலுக்கடியில்!


பட்டப்பெயர்கள் வைக்கும்
மாணவர்களைவிட
பட்டம் பெரும் மாணவர்களை
மறந்துவிடுவதுண்டு
பல ஆசிரியர்கள்........


ஜாமென்ட்ரி பாக்ஸின்
உள்ளிருக்கும் இறகில்
காதுகுடைகிறது
ஒவ்வொரு பள்ளிக்கூடமும்.....


உதிரும் இறகின்
வலித்தெரியாமல்
பறக்கவே செய்கின்றன எப்போதும்!


எல்லா வண்ணங்களையும்
செலவழித்த பிறகுதான்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது
நிறங்களின் அவசியம்!


வானவில் வரையும்
இறகின் மிச்சத்தில்
உதிரலாம்
வண்ண சாக்பீஸ் துகள்கள்.......!

No comments:

neelam enbathu song