Wednesday, September 10, 2008

காணாமல் போதல்....!

வழிதலும்
வழிதல் நிமித்தமும்
இல்லாமல் உருவான
சிநேகத்தின் கடைசிநாள்...
எனக்கான பில்லையும்
நீயே கொடுத்திருந்த
அற்புதமான தருணத்தில்தான்
அது நிகழ்ந்தது!
ஓடிப்போயிருந்த
கோகிலாவிற்காக
சோகம் வாசித்த
உன் தெரு ரோமியோக்களை
தாறுமாறாய் வாரிக்கொண்டிருந்தாய்.....
அடுத்த மாத வீடுமாறுதலும்
யாரோ ஒருவரின் வலைத்தளத்தில்
கண்ட பின்னூட்டத்தையும்
கிண்டலடித்தபோதுதான்
இடறிவிட்டிருக்க வேண்டும் நான்!
உன் வண்டியின்
பின்னுருக்கையில்
சிதறியிருந்த மல்லிகைபூவை
தட்டிவிட்டபடி பேசினாய்
கடன் வாங்காத வார்த்தைகளுடன்....
முகம் தெரியாத
அந்த பெண்ணின்
அத்தனைத் திட்டுகளுக்கும்
சொந்தக்காரனாகிப்போனான்
அந்த முகம் தெரியாத அவன்!
ஒருவேளை
இங்கு தொடங்கியிருக்கலாம் ....

தொலைதலை
முன்னிருத்தியே செல்கிறோம்
ஒவ்வொருமுறையும்
கூடுதல் ப்ரியங்களுடன்!

1 comment:

வனம் said...

வணக்கம்

கவிதை நண்றாக இருந்த்து
பிறகு தெளிவாக எழுதுகிறேன்

நன்றி

neelam enbathu song