Wednesday, January 12, 2011

இது மார்கழி மாத கோலம்...!


தீமூட்டிகுளிர்
காய்கிறதுவாழ்க்கை
மார்கழி கனவு ...!

புன்னகையுடன்
புகைப்படம்
புழுதி படிந்து....

தெரு கடக்கிறது
நதி
கண்களில் ஈரம்!

மனசின்
ஜன்னல் திறக்கும்
மழலை!

தோட்டம்
பூக்களை பறிக்கவே
நீட்டுகிறது விரல்...

வானம்
ரோட்டோரத்தில்
ஆடும் கண்ணாமூச்சி ...

இது
மார்கழி மாத
கோலம்...!
வரட்டும்
போகியில் எரிக்கிறேன்
சோகத்தையும்
தொலைந்து கொண்டிருக்கும்
புகைப்படங்களையும்!

*புகைப்படம: விஜயகுமார்.ஜெ

No comments:

neelam enbathu song