Tuesday, November 25, 2008

அர்த்தங்கள்...!



அர்த்தமாகவே பேசும் எல்லோரிடமிருந்தும்
அர்த்தமற்ற சிரிப்புகளுக்க்கிடையில்

அமைதியாகிப்போகின்றன
அடிமனசு வேதனைகள்!


அழகான தேவதைகளை சந்திக்கிற
எந்த சாத்தானின் இதயமும்
ஒருகணம் நின்று துடிக்கக் கடவது!


ஆயிரம் வாசல்களுக்கு மத்தியில்
நிழல் ஒன்று எட்டிப்பார்க்கலாம்
எதோ ஒரு சாளரம் வழியே!


கடவுளின்
ஆசீர்வாதங்களில்
இறுமாப்புடன் எதிர் வரும்
வெள்ளை நிழல்களின் விழிகளில்
லேசாய் இருட்டின் வாசனை
அர்த்தமில்லாமல்
அனாயசியமாய்
அர்த்தங்களின் விளிம்புகளில் நின்று!

Monday, November 24, 2008

"டேய் ராஸ்க்கல் உன்னத்தான்டா


சிரமப்படும் அளவிற்கு
கசப்புக்காட்டாத
பிரியம் பொத்தி
தரவேண்டியிருக்கிறது
ஒவ்வொருமுறையும்முத்தம் என்ற பெயரில்....

ச்ச் சீ.....என்று தள்ளும்
கரங்களில்
சூடு தணிந்த இதம்
இருட்டிலும் பிரதிப்பளிக்கும்...


ஒரு நிசி உப்புக்கரிப்புடன்
கொஞ்சம்கொஞ்சமாய் ஆவிப்பறக்க
ஊற்றி குடிக்கவேண்டியதாய்......


சாத்தியப்படாத இடத்தில்
சாத்தியப்படுத்திய அவனை
திட்ட முடியாமல்
மெதுவாய் ஊர்ந்து!


பின்புறம் ஒட்டிய
மணல் தட்டி எழுந்த இடம்
பிற்பாடு
பிணம் புதைத்த
மேடாகும்!


நெடுஞ்சாலைகளில்
கிரீச்சிட்டு விளக்கணைக்கும்
வண்டிகளை தொடந்து
மல்லிகை சிதறலுடன்
வியாபாரம் பேசும் .....


அடுத்த வண்டி
நிற்கும் வரை
குளிருக்கிடையில் சிறுநீராய்
ஞாபகப்படுத்திப் போகலாம்-
முதலிரவும் முதல் முத்தமும்!

neelam enbathu song