Tuesday, November 25, 2008

அர்த்தங்கள்...!



அர்த்தமாகவே பேசும் எல்லோரிடமிருந்தும்
அர்த்தமற்ற சிரிப்புகளுக்க்கிடையில்

அமைதியாகிப்போகின்றன
அடிமனசு வேதனைகள்!


அழகான தேவதைகளை சந்திக்கிற
எந்த சாத்தானின் இதயமும்
ஒருகணம் நின்று துடிக்கக் கடவது!


ஆயிரம் வாசல்களுக்கு மத்தியில்
நிழல் ஒன்று எட்டிப்பார்க்கலாம்
எதோ ஒரு சாளரம் வழியே!


கடவுளின்
ஆசீர்வாதங்களில்
இறுமாப்புடன் எதிர் வரும்
வெள்ளை நிழல்களின் விழிகளில்
லேசாய் இருட்டின் வாசனை
அர்த்தமில்லாமல்
அனாயசியமாய்
அர்த்தங்களின் விளிம்புகளில் நின்று!

1 comment:

தேவன் மாயம் said...

நல்ல கவிதை நண்பரே!
வாழ்த்துக்கள்.
தேவா.

neelam enbathu song