Thursday, December 4, 2008

செதில்களால் சுவாசித்தபடி....!



ஒரு பின்மாலைப் பொழுதில்
சாளரம் திறந்து
உள்நுழைந்தது அது!

நெரிசல் சாலையில்
பயணித்த அதன் விலாஎலும்புகள்
போக்குவரத்துக்காவளர்களின்
சிநேக புன்னகைப்போல்
நிலைக்குத்திப்போய்....

தன் திசைகளின் கதவுகளை
யாரோ பூட்டிச்சென்றதாய்
வேர்த்துப்போய்
சொல்லிக்கொண்டது!

கள்ளச்சாவி உபயத்தால்
திறக்க எத்தனித்த
என் இயலாமையின் இடைவெளியில்
அது துள்ளிக்குதிக்க
கைக்குட்டைநீட்டிய என்னை
பரிதாபமாய் பார்த்தது!

முழுபலத்தையும் சேர்த்து அழுத்த
என் வீட்டு
மீன்த்தொட்டிக்குள் நுழைந்து
தண்ணீர் குடித்து கரையேறியது....

கடைசியாய்
என்னை மீனாக மாற்றிப்போனதை
சொல்லிப்போயிருக்கலாம்!

No comments:

neelam enbathu song