Friday, December 5, 2008

உயரங்கள்...!

உயந்த இடங்களில் கூடுக்கட்டவே
பிரியம்காட்டுகின்றன புறாக்கள்
பிள்ளைகளிடமிருந்து
பலகாரங்களை பத்திரபடுத்தும
அந்தக்கால அம்மாக்களைப்போல...!

மலையுச்சியை தேடியே பயணிக்கின்றன
தோற்றக் காதல்கள்...
கைகெட்டும் தூரத்தில்
புத்தகங்கள் தேடும்
படைப்பாளி அப்பாக்களைபோல்!

கம்பங்களின் உயரத்தில்தான்
கட்டப்படுகின்றன கொடிகள்
அறுந்துவிடும் நூல்பயத்தில்
பறந்துகொண்டிருக்கும் காத்தாடிகளைபோல்!

உயங்களின் நிழல் மிதித்தே
நடைபழகுகின்றன வாழ்க்கை
எப்போதும் வான் பார்க்க ஆசைப்படும்
விதைநெல்போல்....!

எழுதுவதற்கு முன்பும்
எழுதியதற்க்குபின்பும்
உயரமான இடத்தில் இருந்து இறங்கிவரவே
பிரியம் காட்ட செய்கின்றன இந்த கவிதை!

No comments:

neelam enbathu song