Tuesday, September 4, 2018

01-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 1 தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " இன்றைய கவிதை ...

Raman Nagappan shared a photo.
RJ Naga
01-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 1
இனி ஒவ்வொரு நாளும் பிரிவும் பிரிவு நிமித்தமுமான கவிதைகளி இந்த பகுதியில் உங்களுக்காக பாதிவேற்ற போகிறேன் ..
தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " ஒற்றையடி பாதைக்காக ....
இன்றைய கவிதை ...
கின்னார சத்தத்தில
கெடையெல்லாம் முழிச்சிருக்கு ....
தழை பறிச்ச தொரட்டியெல்லாம்
தொழுவத்தில் படுத்திருக்கு ...
ஒத்தமாட்டு வண்டியிலே ஒய்யாரமா போறவக
லாந்தர் விளக்கொளியில் வக்கணையா வாரவக
ஒத்த கொடம் தண்ணிஊத்தி
நந்தவனம் பூத்திருக்கும்
கொசுவத்தில் தலை சாய்ச்சு
குண்டுமல்லி வேர்த்திருக்கும் ...
அய்யனாரு வாரதுபோல் என்ன ஒரு கம்பீரம்
சீரகசம்பாவ சமைச்சதுபோல் சாரீரம் ..
குத்துக்காலிட்டு நான் திண்ணையில காத்திருந்தா
வீதியில உன் நெனப்பு நெழல்போல குடைபுடிக்கும்...
ஆலமர விழுதுக்கு ஜடை பின்னி பார்த்தவத்தான்
ஒத்தப்பனை மரமாட்டம் தவிக்கறேனே இப்போது...
ஆத்தாடி அடிமனசை வேரோடு பறிச்சுப்புட்டான்
ரங்க ராட்டினமா என் மனச சுத்த உட்டான் ....
காதுக்குள்ள திருகாணியா காதலை நான் பூட்டிக்கிட்டேன்
சிறுக்கி மக உசுருக்குள்ள காதல் கதை எழுதிகிட்டேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song