Tuesday, September 4, 2018

11-04-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 35 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
11-04-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 35
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நடைவண்டியும்
மரப்பாச்சி பொம்மையுமா
மண் குழைச்சு வாழ்ந்த வாழ்க்கை ...
வெயில் ஊற்றி பிசைந்து
பூசின சுவரில்
என் பெயர் எழுதி வச்ச இடத்தில்தான்
எங்கிருந்தோ வந்த ஒரு தட்டான்
ஏதோ சொல்ல நினைச்சு
சொல்லாம பறந்து போச்சு ...
பிளவு பட்ட இடத்தில்
மொட்டுவிட்ட செடியின்
சின்ன இலையில்
ஊர்ந்துபோகும் எறும்பாட்டம்
உருண்டுபோகுது பாவாடை சட்டை வயசு ....
சுருட்டிப்போட்ட முடியில் கூட
சொப்பனத்தோட நிழல் படிஞ்சிருக்கும்
எரும கண்ணுகுட்டியாட்டம்
அங்கிட்டும் இங்கிட்டும்
சுத்தி அலைஞ்சது டிசம்பர் பூ பறிச்ச
மார்கழிமாசத்து ஞாபகம்...
ஒத்த பரண்ல ஒளிஞ்சிட்டு கிடக்கலாம்
திருடன் போலீஸ் ஆட்டத்தில்
தொலைஞ்சுபோன தொங்கட்டானோட திருகாணி ..
வாசல் தெளிக்கும் அவசரத்தில்
பெருக்கி தள்ளிவிடுகின்றன
பூசணிப்பூக்களின்
அர்த்தப்படுத்தும் தருணங்கள் ...
- நாகா

No comments:

neelam enbathu song