RJ Naga
24-07-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 105
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வீட்டில் ஜன்னல் இருக்கிறதா என்று
அவளை நான் கேட்பதில்லை ..
கதவிருக்கும் வீட்டில் நிச்சயம் ஜன்னல் இருக்கும்
சாத்தியங்கள் தெரிந்தவனை
சங்கடப்படுத்தாமல் சொல்வாள்-
ஜன்னலுக்குள் வீடு இருக்கிறது என்று ...
கதவு திறந்து மூடும் சூட்சுமத்தில்
உள்நுழைந்து வெளியேறலாம்
வீதிகள் ஜன்னல் வழியாக ..
தெருவிளக்கின் வெளிச்சம் வாங்கி
அறைதுழாவும் நாழிகையில்
எலிப்பொறிக்குள் சிக்கிக்கொண்ட
பூனையாகி போவேன் நான் ...
சுவர்களை நீக்கிவிட்டால்
அதை வீடென்று சொல்ல முடியாது- சிரிப்பாள் ....
அடைபட்ட ஒன்றுக்குள்
சிறைப்படுவதென்பது சாபம் என்பாள் - தாயம் உருட்டியபடி ...
ஒருகாலத்தில் பதிந்து போன ஜன்னல் கம்பிகளில்
கை ரேகை குறித்தான கட்டுமானங்களை உடைத்தது
வெளிச்சென்று விழுந்த சுருட்டி எறிந்த
அவள் கூந்தல் முடிகள் ...
ஒரு பௌர்ணமியை ஜன்னல் வழியாக பார்க்கும்
பெண்ணாக அவள் இல்லை என்பதால்
வீட்டுக்குள் ஆகாயம் இருக்க வாய்ப்புகள் அதிகம்...
யாராவது இனி வாசல்களில்
விண்மீன்களை பார்த்தால்
அவள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்
நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ....
வீடுகளை பத்திரப்படுத்துவதை விட அவளை
பத்திரப்படுத்த வேண்டும் நான் ....
அவளை நான் கேட்பதில்லை ..
கதவிருக்கும் வீட்டில் நிச்சயம் ஜன்னல் இருக்கும்
சாத்தியங்கள் தெரிந்தவனை
சங்கடப்படுத்தாமல் சொல்வாள்-
ஜன்னலுக்குள் வீடு இருக்கிறது என்று ...
கதவு திறந்து மூடும் சூட்சுமத்தில்
உள்நுழைந்து வெளியேறலாம்
வீதிகள் ஜன்னல் வழியாக ..
தெருவிளக்கின் வெளிச்சம் வாங்கி
அறைதுழாவும் நாழிகையில்
எலிப்பொறிக்குள் சிக்கிக்கொண்ட
பூனையாகி போவேன் நான் ...
சுவர்களை நீக்கிவிட்டால்
அதை வீடென்று சொல்ல முடியாது- சிரிப்பாள் ....
அடைபட்ட ஒன்றுக்குள்
சிறைப்படுவதென்பது சாபம் என்பாள் - தாயம் உருட்டியபடி ...
ஒருகாலத்தில் பதிந்து போன ஜன்னல் கம்பிகளில்
கை ரேகை குறித்தான கட்டுமானங்களை உடைத்தது
வெளிச்சென்று விழுந்த சுருட்டி எறிந்த
அவள் கூந்தல் முடிகள் ...
ஒரு பௌர்ணமியை ஜன்னல் வழியாக பார்க்கும்
பெண்ணாக அவள் இல்லை என்பதால்
வீட்டுக்குள் ஆகாயம் இருக்க வாய்ப்புகள் அதிகம்...
யாராவது இனி வாசல்களில்
விண்மீன்களை பார்த்தால்
அவள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்
நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ....
வீடுகளை பத்திரப்படுத்துவதை விட அவளை
பத்திரப்படுத்த வேண்டும் நான் ....
- நாகா
No comments:
Post a Comment