RJ Naga
25-07-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 106
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு கிளுவை மரமாய்
கிளைவிரிக்க ஆரம்பித்த அவனின்
ஞாபக வேர்கள் படர ஆரம்பித்தது அவளுக்குள் ...
பாவாடை சட்டை வயதை
கடத்திவரும் மரப்பாச்சியாக இருந்ததில்லை அவன் ...
பூக்கள் உதிர்க்கும் அனுபவத்தில்
சூல் கொண்டதில்லை நினைவுகள் ..
கூடுக்கட்டும் பறவை தேடி
காத்திருந்த கிளையில் அசைந்தது ஊஞ்சல்
முதல் திருகாணி தொலைந்தது அப்போதுதான் ...
வேலி கட்டிய வாசலை கடந்து வரும் தென்றலாக
மரத்தின் நிழலில் படுத்துறங்கியது காதல்
- முதல் கண்ணாடி வளையல் உடைந்தது அப்போதுதான் ...
தொட்டு படர்ந்து பூக்க ஆரம்பிக்கும்
அவளின் நெற்றி வியர்வையில்
கரையொதுங்கியது காமம்
- ஒரு பாய்மரம் தரைதட்டியது அப்போது தான் ...
எல்லா மரங்களையும் வெட்டிய பின்னரும்
கிளுவை மரத்தின் பக்கத்தில் கிடந்த
கோடாரியில் அமர்ந்து போகிறது பட்டாம்பூச்சி
-மொத்தமாய் முத்தங்களில் கரைந்தது அப்போதுதான் ..
ஒரு கிளுவை மரமும் ஒரு காதலுமாக
அவர்களை சுற்றி வளர ஆரம்பித்தது ஒரு மதில்சுவர்
முதல் முறையாக சுகமாய் தொலைந்தது அப்போதுதான் ...
கிளைவிரிக்க ஆரம்பித்த அவனின்
ஞாபக வேர்கள் படர ஆரம்பித்தது அவளுக்குள் ...
பாவாடை சட்டை வயதை
கடத்திவரும் மரப்பாச்சியாக இருந்ததில்லை அவன் ...
பூக்கள் உதிர்க்கும் அனுபவத்தில்
சூல் கொண்டதில்லை நினைவுகள் ..
கூடுக்கட்டும் பறவை தேடி
காத்திருந்த கிளையில் அசைந்தது ஊஞ்சல்
முதல் திருகாணி தொலைந்தது அப்போதுதான் ...
வேலி கட்டிய வாசலை கடந்து வரும் தென்றலாக
மரத்தின் நிழலில் படுத்துறங்கியது காதல்
- முதல் கண்ணாடி வளையல் உடைந்தது அப்போதுதான் ...
தொட்டு படர்ந்து பூக்க ஆரம்பிக்கும்
அவளின் நெற்றி வியர்வையில்
கரையொதுங்கியது காமம்
- ஒரு பாய்மரம் தரைதட்டியது அப்போது தான் ...
எல்லா மரங்களையும் வெட்டிய பின்னரும்
கிளுவை மரத்தின் பக்கத்தில் கிடந்த
கோடாரியில் அமர்ந்து போகிறது பட்டாம்பூச்சி
-மொத்தமாய் முத்தங்களில் கரைந்தது அப்போதுதான் ..
ஒரு கிளுவை மரமும் ஒரு காதலுமாக
அவர்களை சுற்றி வளர ஆரம்பித்தது ஒரு மதில்சுவர்
முதல் முறையாக சுகமாய் தொலைந்தது அப்போதுதான் ...
- நாகா
No comments:
Post a Comment