Tuesday, September 4, 2018

04-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 3 இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...


RJ Naga
04-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 3
இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...
மஞ்சக்கனகாம்பரம்
கொள்ளையில பூத்திருக்கு
துலுக்க சாமந்தி
வாசத்தில வீடிருக்கு...
கூரையில அவரக்கொடி
ஆகாசம் பார்த்திருக்கு ....
கோபுரத்து நிழலாட்டம்
நெனப்புன்ன சுமந்திருக்கு ...
செறுவாட்டு துட்டுக்கு
காணிவாங்க முடியாது ..
அருகம்புல் திங்காட்டி
ஆட்டுபசி அடங்காது ..
மந்தையில் நின்னாலும்
தறிகெட்டு திரியாது ...
பருத்தி காட்டுக்குள்
வெடிச்சத்தம் குறையாது ...
கட்டைவண்டி போன தடம்
காஞ்ச ஆறு காட்டிப்புடும் ..
உள்ளுக்குள்ள கல்லெறிஞ்சா
பார்வையில் சாரல்வரும் ....
குறைகுடமா தளும்பறது
கைவளைகள் சொல்லிப்புடும் ..
குத்தவச்ச திண்ணையிலே
உன் நெனப்பு கோலமிடும் ..
மழை ஓய்ந்த நேரத்துல
கிளைகளிலே தூறல் வரும் ..
காகித கப்பலுக்கும்
கடல் மேல காதல்வரும் ..
பூனைக்குட்டி போலத்தானே
உன் காலசுத்தி கெடக்குறேன் ..
பொசுக்குன்னு பூத்ததால
காதலை பொத்திவச்சு தவிக்கிறேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song