RJ Naga
03-05-2017
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 52
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
உயிரை கடைந்தெடுக்கும்
மத்தாகிற போதுதான்
வாசுகி பாம்பின் வலி என்ன என்பதை
உணர முடிகிறது என்னால்...
ஆலகாலம் விழுங்கும் அரணாகிற தருணம்
கண்டம் தாண்டி செல்ல மறுக்கும்
நீலம் பரவும் நினைவின் மயக்கம்
உள்ளங்கை எங்கும் பரவ ஆரம்பிக்கிறது ...
ஒரு சர்ப்பத்தின் ஆதி பயணத்தை போல
தடயம் அழிக்க முயற்சிக்கும்
தனிமையின் வெளியில்
தத்தி போகும் வெட்டுக்கிளியாகிறது
காட்டு சிறுக்கியின் மஞ்சணத்தி கனவுகள்...
மலர் தொட்டு முள் நுழைந்து
மூங்கில் துப்பிய காற்றின் மேனி எங்கும்
இசையில் கீறலாக அவன் நினைவு ....
அர்த்தநாரீஸ்வர நிலையில் தான்
அணுக வேண்டி இருக்கிறது எதையும் இன்று
வந்து சாய்த்துவிட்டு போகலாம்
இல்லை புசித்துவிட்டு போகலாம்
அகோர பசியில் அகோரியாகிறது காதல்......
மத்தாகிற போதுதான்
வாசுகி பாம்பின் வலி என்ன என்பதை
உணர முடிகிறது என்னால்...
ஆலகாலம் விழுங்கும் அரணாகிற தருணம்
கண்டம் தாண்டி செல்ல மறுக்கும்
நீலம் பரவும் நினைவின் மயக்கம்
உள்ளங்கை எங்கும் பரவ ஆரம்பிக்கிறது ...
ஒரு சர்ப்பத்தின் ஆதி பயணத்தை போல
தடயம் அழிக்க முயற்சிக்கும்
தனிமையின் வெளியில்
தத்தி போகும் வெட்டுக்கிளியாகிறது
காட்டு சிறுக்கியின் மஞ்சணத்தி கனவுகள்...
மலர் தொட்டு முள் நுழைந்து
மூங்கில் துப்பிய காற்றின் மேனி எங்கும்
இசையில் கீறலாக அவன் நினைவு ....
அர்த்தநாரீஸ்வர நிலையில் தான்
அணுக வேண்டி இருக்கிறது எதையும் இன்று
வந்து சாய்த்துவிட்டு போகலாம்
இல்லை புசித்துவிட்டு போகலாம்
அகோர பசியில் அகோரியாகிறது காதல்......
- நாகா
No comments:
Post a Comment