Monday, September 3, 2018

17-07-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 100 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
17-07-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 100
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்படி ஒரு நிலையில்
அத்தையை நான் பார்த்ததில்லை ...
ஆவி பறக்கும் டம்பளரை
பிடிக்கவே பயப்படுபவள்
அடங்கி போய் கிடக்கிறாள்...
நிலைக்கண்ணாடியில்
ஒரு தேவதையாக அவள்.....
திரைசீலையெங்கும் ஜன்னல்களின் நிழல்....
அப்பத்தா அப்படியே விட்டிருக்கலாம்
வாழா வெட்டியாக இருந்திருப்பாள் ஒருவேளை ...
ஒரு அருகம்புல்லை
தீ மேய்ந்துவிட்டது அவசரமாக ...
அம்மாவின் விரல் பிடித்து
புடவைக்கு பின்னே ஒளிந்து பார்த்தது
அமாவாசை நிலவை தேடி அலையும்
உன்மத்த நிலையில் நான்......
அவசரக்காரி இப்படி செய்துவிட்டாளே
அப்பாவின் நியாமான கோபத்தில்
ரணப்பட்டு கிடந்தது நேற்றைய ஞாபகம் ..
ரணமானவள் உதாரணமாகிப்போனாள்
எங்கள் குடும்பத்தில் ...
கொஞ்சம் தைரியம் கொஞ்சம் அவசரம்
ஏதோ ஒன்றில் ஒளிந்துகொண்டிருக்கிறது
வாழ்வின் நிலையாமை ....
இப்போதெல்லாம் வாழை இலையில்
சாப்பிட நேர்கையில் வந்து போகிறது
அத்தையின் ஞாபகம் ..
- நாகா

No comments:

neelam enbathu song