Monday, September 3, 2018

20-07-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 103 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
20-07-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 103
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
என் வீட்டு கண்ணாடியில்
தன்னை வரைந்து போகிறாள்
புன்னகைக்கிறது தோட்டம் ...
வெட்கங்களை குழைத்து
என் மீது வீசி போகிறாள்
மருதாணியாகிறது கனவு...
தனித்து நடக்கும் சாலையில்
எனக்கான பாடலாகிறாள்
இசையில் நனைகிறது பயணம் ...
என் அலமாரியில்
புத்தகங்களாய் நிரம்புகிறாள்
கவிதையாகிறது நிகழ்...
என் கோப்பைகளில்
திரவமாக தளும்புகிறாள்
பருக தொடங்குகிறது தாகம் ...
என் பழக்கப்பட்ட இரவுகளில்
மின்மினியாய் வருகிறாள்
நிலவாகி போகிறது நேசம்..
என் அமுதசுரபியில்
முதல் பருக்கையாகிறாள்
மணிமேகலையாகிறது காதல்...
- நாகா

No comments:

neelam enbathu song