RJ Naga
18-07-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 101
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
புளியமரத்தின் நிழலில்
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பாக
ஜன்னல் படியும் அவள் நிழலில்
இளைப்பாறுகிறது காதல்....
ஓட்ட மறுத்து விலகி நிற்கும்
ஓடாக பழத்தை போர்த்தி நிற்கிறது சகலமும் ...
நெடுஞ்சாலைகளை முத்தமிடும்
மரத்தின் கிளைகளில் குதித்து விளையாடும்
அணில்களை போல அசைகிறது ஞாபகம் ...
யாரோ கட்டிய கயிற்றில்
அசைகிறது ஊஞ்சலில் தட்டான் ஒன்று ...
புளியம் பூக்களில் துளிர்க்கும் தேனில்
நனைந்து எழுகிறது அவளின் நேசத்தைப்போல ..
ஒரு மரம் காதலை விதைக்கிற போது
ஒரு காதல் காதலர்களை அறுவடை செய்கிறது ...
கடந்து போகும் வாகனங்களை
கணக்கெடுக்கும் புளியமரங்களை போல
இரவு நேரங்களில் அகாலத்தில் மட்டும்
பயமுறுத்தவே செய்கின்றன
அசையும் கிளைகளில்
தலைவிரித்தப்படி அதன் இருப்பு....
அடுப்பெரிக்கும் புளியமரங்கள்
அடையாளப்பட்டதில்லை இதுவரை
ஜன்னல்களாகவும் கதவுகளாகவும்....
காதலின் நிலத்தில் பதிய ஆரம்பிக்கிறது
முதல் முறையாக புளியமரத்தின் வேர்கள்...
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பாக
ஜன்னல் படியும் அவள் நிழலில்
இளைப்பாறுகிறது காதல்....
ஓட்ட மறுத்து விலகி நிற்கும்
ஓடாக பழத்தை போர்த்தி நிற்கிறது சகலமும் ...
நெடுஞ்சாலைகளை முத்தமிடும்
மரத்தின் கிளைகளில் குதித்து விளையாடும்
அணில்களை போல அசைகிறது ஞாபகம் ...
யாரோ கட்டிய கயிற்றில்
அசைகிறது ஊஞ்சலில் தட்டான் ஒன்று ...
புளியம் பூக்களில் துளிர்க்கும் தேனில்
நனைந்து எழுகிறது அவளின் நேசத்தைப்போல ..
ஒரு மரம் காதலை விதைக்கிற போது
ஒரு காதல் காதலர்களை அறுவடை செய்கிறது ...
கடந்து போகும் வாகனங்களை
கணக்கெடுக்கும் புளியமரங்களை போல
இரவு நேரங்களில் அகாலத்தில் மட்டும்
பயமுறுத்தவே செய்கின்றன
அசையும் கிளைகளில்
தலைவிரித்தப்படி அதன் இருப்பு....
அடுப்பெரிக்கும் புளியமரங்கள்
அடையாளப்பட்டதில்லை இதுவரை
ஜன்னல்களாகவும் கதவுகளாகவும்....
காதலின் நிலத்தில் பதிய ஆரம்பிக்கிறது
முதல் முறையாக புளியமரத்தின் வேர்கள்...
- நாகா
No comments:
Post a Comment