Tuesday, September 4, 2018

14-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 12 தமிழ் 89.4 பண்பலையில் இன்றைய வானவில் நிகழ்ச்சியில் ஒலித்த கவிதை ....


RJ Naga
14-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 12
தமிழ் 89.4 பண்பலையில் இன்றைய வானவில் நிகழ்ச்சியில் ஒலித்த கவிதை ....
அதுவரை இல்லாத பொறுமை
அவனை பார்த்த பின்னாலதான் வந்து போச்சு
செம்மறி ஆட்டு கூட்டம் போல
தறிகெட்டு போய் ஊர சுத்துது ...
அவன் முன்னால போக
நான் ஆட்டுக்குட்டியாட்டம் பின்னால போவேன் ..
வழிதவறி போன ஒரு மரிய போல
நான் பரிதவிச்சு நினைப்ப
தொரட்டி கண்ணால தழைப்பறிச்சு போடும்
அவன் காதல் என்னை பத்திரமா கூட்டிப்போகும் ...
பள்ளத்தாக்கோ சமவெளியோ
கடந்து போகும் நேரத்தை
கடத்தி போவான் கம்பீரமா..
கசாப்பு கடைய கடந்து போகும்
ஒரு சனிக்கிழமை சாயந்திர நேரத்து
லேசான அதிர்வை போல
எங்க போனானோ தெரியல பயபுள்ள
தேடிட்டு கெடக்கறேன் இப்போ வரைக்கும் ...
வீதியில அவன் நிழல் பார்த்தா
என் வீட்டு ஜன்னல் தொறக்கும் ...
சின்னதா இருமல் சத்தம்
லேசாக எட்டி பார்த்தா
அடுக்களையில் கசாயம் கொதிக்கும் ...
போதாது அவன் நெனப்பு
திருவிழாவா திமிர வைக்குது ...
யான புகுந்த கரும்புக்காடா
பாவி நெஞ்சு பரிதவிக்குது....
ஒத்தையில நின்ன காதல்
பந்தி வைக்க வக்கு இல்ல ...
கைபுடிச்சு கூட்டிப்போக
சிறுக்கிக்கிப்ப யோகமில்ல…
- நாகா

No comments:

neelam enbathu song