Tuesday, September 4, 2018

16-03-2017 வியாழன் ஒற்றையடி பாதை: 14 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் நிறைவில் ஒலித்த கவிதை ...


RJ Naga
16-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதை: 14
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் நிறைவில் ஒலித்த கவிதை ...
வேலிகாத்தான் மரத்தை தாண்டி
வெக்கையில நிக்குது
ஓணாஞ்செடி ஓரத்துல
தட்டான் ஒண்ணு சுத்துது ...
கடையாணி தொலைச்ச வண்டி
குப்புற குடை சாயும்
சுத்துற சக்கரமோ
சட்டுனு இடம் மாறும் ....
அடிக்கடி தொலைச்சுப்புட்டு
தேடுறது வேற இடம்
விட்ட இடம் மறந்து போச்சு
விட்டிலாகுது இந்த நேரம் ...
வைக்கோல் பொதி போல
மனசுக்குள் சுமை அழுத்த
நெருஞ்சி முள் கணக்கா
குத்துறத என்ன சொல்ல ...
சுட்ட பான போல
சுணக்கம் ஏதுமில்லை
தப்பு கடலையாட்டம்
வீணா போனதென்ன ...
கம்மாக்கரையோரம்
நெலா விழுந்தும் நனையல
அய்யனார் தோப்புக்குள்ள
நட்சத்திரங்கள் காய்க்கல...
பம்பரம் சுத்துற
சாட்டைக்கிப்ப கிறுக்காச்சு ...
கிறுக்கச்சி மனசுக்குள்ள
பச்சை குத்தி நாளாச்சு ...
நெனப்பு தீப்பிடிச்சு
குப்பு எரியுது ...
நெருப்பு வச்சவளை
கைபுடிச்சு திரியுது . ...
- நாகா.

No comments:

neelam enbathu song