Tuesday, September 4, 2018

22-06-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 86 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
22-06-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 86
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு மழைப் பார்வை பார்க்க ஆரம்பிப்பான்
காகித கப்பல்கள் மிதக்க ஆரம்பிக்கும் எனக்குள் ...
விதைத்தூவி செல்லும் அவன் ஒற்றை சொல்
எனக்குள் வனங்களை வார்த்தெடுக்க ஆரம்பிக்கும் ...
மௌனத்தை எழுத ஆரம்பிக்கும் அவன் பேச்சு
எனக்குள் இசையின் சாளரங்களை திறந்து வைக்கும் ...
வாசலில் கோலமாக சில நேரம்
ஊஞ்சலில் பொன்வண்டாக பலநேரம்
திண்ணையில் பல்லாங்குழியில் சோழியாக ஒரு நேரம்
எல்லாநேரமும் அவனுக்கானதில்
எனக்கான நேரம் எதுவுமில்லாமல் நான் ..
உள்ளங்கையில் பதிந்த உதடுகள்
காதுமடலுக்கு பின்னே மூச்சுக்காற்றின் உஷ்ணம்...
அவன் கால்பதித்த சுவட்டில் கால் வைத்தே நடக்கிறேன்
வழியெங்கும் வரும் நிலவாக என் இரவுக்குள் நான்...
கிளைத்திரும்ப விரும்பாத பூவாக
கிடைத்தேடி திரும்பாத மறியாக
அவனை மேய்ப்பனாக்கும் என் அதீத நேசம் ..
ஒளிந்துகொள்ளும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
ஒளித்துக்கொள்கிறேன் அவனுக்குள் என்னை ..
அவன் யார் என்பதை தெரிந்துகொள்ளும்
அதிகபட்ச சிரத்தையில் வந்துபோகிறது
சொப்பனமாக அவனின் ஞாபகம் ....
- நாகா

No comments:

neelam enbathu song