Tuesday, September 4, 2018

18-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 15 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
18-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 15
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
புங்கமரம் உதிர்த்த நிழல்
பூவொன்னு அமர்ந்து போச்சு .....
முனை உடைஞ்ச சிமெண்ட் பெஞ்சு
அணிலொன்னு குதித்து போச்சு ..
மேற்கால இருந்து வரும்
ரயிலுக்கு நேரமாச்சு
காத்திருக்க பொறுமை இன்றி
தட்டான் ஒண்ணு தாழ போச்சு ...
ஊருக்கு உள்ள வரும்
ஒத்த ரயில் போலத்தான்
எப்பவாச்சும் உள்நுழையும்
காதலொன்னு வந்து போச்சு ...
செருவாட்டு துட்டுக்குள்ள
ஆசைகளை பூட்டி வெச்சேன்
பரண்மேல பாத்திரமா
ஞாபகங்கள் நட்டு வச்சேன் ...
ஓடையில கால் நனைக்க
உச்சந்தலை சில்லாகும்
கூந்தல் தொடும் ஈரக்காத்து
குபுக்கென்னு சூடாகும் ....
சூடம் போல பத்திகிறேன்
ஒத்த சொல்ல சொல்லிப்போடு...
ஆறிப்போன நெஞ்சுக்குள்ள
அக்கறையா பேசிப்பாரு ....
காலுக்கு கொலுசு கட்டி
முத்தாக உன்னை வச்சேன்
உள்ளங்கை மருதாணியா
உன் காதலை நான் தொட்டு வச்சேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song