Tuesday, September 4, 2018

19-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதை : 16 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......


RJ Naga
19-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதை : 16
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......
ஏழுமலை எழுகடலை
இங்கிருந்து தாண்டினதா
தாத்தா சொன்னதை
நம்பின வயசு அது ..
முதல் ஹீரோவா தாத்தா தெரிஞ்சதுல
ஆச்சரியம் ஒன்னும் இல்ல ...
வெத்தலையில் மைதடவி
தொலைஞ்ச பொருளை
கண்டுபிடிக்க சொல்லி
ஊரே அப்பத்தாவை கேட்க
மிரட்சியா பார்த்த காலம் அது ....
வடை சுட்ட பாட்டிக்கும்
என்னோட பாட்டிக்கும் ஆறு வித்தியாசங்கள்...
அமாவாசை ராத்திரியில்
ஒத்தையில போனப்ப
முனிய பாத்து புளியமரத்தடியில்
ஒளிந்து கொண்ட சித்தப்பா
ஓயாம சொன்னப்பல்லாம்
வாய்பொத்தி கேட்ட ரெட்டைஜடை வயசு அது ...
காதுல பூவை தாராளமா சுத்துன சித்தப்பா
சித்திக்கிட்ட திக்கி திக்கிதான் பேசுவார்...
ஆளுக்கு ஒரு கதையை
அழகாக சொல்வாங்க
நெசமாவே நடந்ததுனு
நம்பவும் வைப்பாங்க....
திருநீறு பூசி தூங்கவச்சதும்
வேப்பில்லை அடித்து
பயத்தை விரட்டினதும்
இன்னமும் மனசுல அப்படியே கெடக்கு ...
உச்சிவேளையில
ஒத்தையில போகாத...
புளிய மரத்தடியில் தனியா நிக்காத..
வேப்பங்காடு கிணத்தடியில்
சத்தம் கேட்டு திரும்பாதா...
-இப்படி சொல்லியே
வளர்த்து புட்டாக செங்கல் சூளையாட்டம் ......
லாந்தரை ஏத்துற நேரமானா போதும்
யாராச்சும் வீட்டுல
இருக்கோணும் எனக்கு ..
சின்னதா சத்தம் காதுல கேட்டாலும்
யான புகுந்ததா பயம் வந்து தள்ளும்
மூச்சுக்க யாரோ ரயில் ஓட்றதா நெனப்பு ...
இப்போயெல்லாம் பயந்து பயந்து தான்
வாழவேண்டி கெடக்கு ...
துணிச்சல் செத்து ரொம்ப நாளாச்சு ...
பொட்டப்புள்ளைக்கு
இன்னும் வெளுக்கல கெழக்கு
பயத்தை அடகு வச்சா திரும்புமா வயசு ... ....
- நாகா

No comments:

neelam enbathu song