Tuesday, September 4, 2018

20-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை: 17 தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
20-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை: 17
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
தோட்டத்து வீட்டுல
சின்னதா கூடிருக்கு
எங்கிருந்தோ வந்திருந்த
குருவி ஒன்னு கட்டுன வீடு அது ..
தோப்புக்கு போறப்ப
கீச்சுக்கீச்சு சத்தத்துல
செல்லமா அது பேசும் ...
அது மொழியை புரிஞ்சுக்க
எனக்கு நேரமில்லை
என் மொழியில் நலம் பேச
அது கத்துக்க மறந்ததில்லை ..
பொங்கலுக்கு அடித்த வெள்ளையில
குருவிக்கூடு கலைஞ்சு போச்சு
குப்புற விழுந்த கூடு
கோபுரமா சரிஞ்சு போச்சு ...
ஒத்த நெல்மணியை
செல்லமா கொத்தவரும்
சிறகு விரிக்கையில
ஆகாசம் கூட்டி வரும்
சிட்டுக்குருவிக்கு அப்பதான் சேதாரம் ...
குருவி கூடாட்டம் தான்
எங்க வீடும் இருக்கும் ..
கூடு சிதறிய வீடா போச்சு அப்புறம் ...
அன்னிக்கு பெய்ஞ்ச மழையில
மரத்துல தொங்குன
தூக்கணாங்குருவிக்கூடு
பொத்துனு விழந்தது மாதிரி
எல்லாம் முடிஞ்சு போச்சு எங்க வீட்டுலயும் ..
அதுக்கு பொறவுதான்
தோட்டத்துல கட்டுன வீட்டுல
கூடொன்னு கட்டிச்சு குருவி ...
பார்த்து பாத்துதான்
வெள்ளையடிச்சாங்க ...
சட்டுனு முடியும்னு
கனாக்கூட கண்டதில்லை ...
கூடில்லா வீட்டுக்குள்ள
குருவியா தங்கிகிட்டேன் ...
தந்தி கம்பத்தில் உட்கார்ந்த குருவியாட்டம்
சிறகுலர்த்த கத்துக்கிட்டேன் ...
சிட்டுக்குருவி லேகியத்தில்
செத்துப்போச்சு சில குருவி
சத்தம் போட்ட பேச்சைக்கேட்டு
மாயமாச்சு சிலகுருவி ...
எப்பவாச்சும் வழிதவறி
உள்ளவரும் குருவிக்கு
என் அட்ரஸ் தெரியாது
அது இருக்கும் இடத்துக்கு
வழிதேடி நான் போக முடியாது ...
மறுபடியும் கூடுகட்டும்
நம்பிக்கையில் காத்திருப்பேன் ...
மருதாணி அரைச்சு வச்சு
செவக்கும் வரை பார்த்திருப்பேன் ....
- நாகா

No comments:

neelam enbathu song