RJ Naga
05-04-2017
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 31
தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
பனந்தோப்பு மைதானத்தில்
சைக்கிள் நான் மிதிக்க என்ன பிடிக்க ஓடிவருவான் ..
முட்டி சிராய்த்த போது
பசுமாட்டு சாணத்தை
கொண்டுவந்து பூசிவிடுவான் ...
நாட்டாமை கிணத்துல உள் நீச்சல்
பழகினப்ப அவனால மட்டும்தான்
ஈச்சம்பழத்தை பறிச்சு தர முடிந்தது....
கருவாட்டு கொழம்பாட்டம்
சப்புக்கொட்ட வைக்கும் அவன் சிநேகம் ..
திருவிழா கூட்டத்துல ஒத்தையில் நின்னப்ப
சந்தையில பேரம் பேசி கண்ணாடி வளை வாங்கினப்ப
அவன்கூட நடந்து ஊரெல்லாம் சுத்தினப்ப
கண்ணாமூச்சி ஆட்டம் போல
மணல்வீடு கனவு போல
எல்லாமே கலைஞ்சு போச்சு ...
மணல் ஏத்தி வந்த லாரி ஒண்ணு
அவன் காலேறி போனது பரிதாபம் ...
வீட்டுக்குளேயே முடங்கி போச்சு அவன்
சகல உலகம் ..
அப்பாவோட வற்புறுத்தல்
வீட்டுக்காரங்களோட நிரபந்தம்
கட்டி வச்சுட்டாங்க இன்னொரு வீட்டுக்கு
மருமகளா என்ன...
நெனப்புக்குள்ள தோண்டின குழியில
காதல்யானை விழுந்து போச்சு ...
அவனை எப்போவாச்சும் பார்க்கிற போதெல்லாம்
தலைய திருப்பிக்கிறான் ..
மறுதலிப்பை முன்வைக்கும் அவனுக்கு
நான் எப்பவும் குற்றவாளி தான்
பொண்ணா பொறந்திருக்க கூடாது ...
இன்னும் முட்டியில் தழும்பாய்
ஒரு சைக்கிள் ஞாபகம்
அவன் பெயரை எழுதிச்செல்கிறது .....
சைக்கிள் நான் மிதிக்க என்ன பிடிக்க ஓடிவருவான் ..
முட்டி சிராய்த்த போது
பசுமாட்டு சாணத்தை
கொண்டுவந்து பூசிவிடுவான் ...
நாட்டாமை கிணத்துல உள் நீச்சல்
பழகினப்ப அவனால மட்டும்தான்
ஈச்சம்பழத்தை பறிச்சு தர முடிந்தது....
கருவாட்டு கொழம்பாட்டம்
சப்புக்கொட்ட வைக்கும் அவன் சிநேகம் ..
திருவிழா கூட்டத்துல ஒத்தையில் நின்னப்ப
சந்தையில பேரம் பேசி கண்ணாடி வளை வாங்கினப்ப
அவன்கூட நடந்து ஊரெல்லாம் சுத்தினப்ப
கண்ணாமூச்சி ஆட்டம் போல
மணல்வீடு கனவு போல
எல்லாமே கலைஞ்சு போச்சு ...
மணல் ஏத்தி வந்த லாரி ஒண்ணு
அவன் காலேறி போனது பரிதாபம் ...
வீட்டுக்குளேயே முடங்கி போச்சு அவன்
சகல உலகம் ..
அப்பாவோட வற்புறுத்தல்
வீட்டுக்காரங்களோட நிரபந்தம்
கட்டி வச்சுட்டாங்க இன்னொரு வீட்டுக்கு
மருமகளா என்ன...
நெனப்புக்குள்ள தோண்டின குழியில
காதல்யானை விழுந்து போச்சு ...
அவனை எப்போவாச்சும் பார்க்கிற போதெல்லாம்
தலைய திருப்பிக்கிறான் ..
மறுதலிப்பை முன்வைக்கும் அவனுக்கு
நான் எப்பவும் குற்றவாளி தான்
பொண்ணா பொறந்திருக்க கூடாது ...
இன்னும் முட்டியில் தழும்பாய்
ஒரு சைக்கிள் ஞாபகம்
அவன் பெயரை எழுதிச்செல்கிறது .....
- நாகா
No comments:
Post a Comment