RJ Naga
19-07-2017
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 102
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அந்த முப்பரிமாண திரைப்படம்
முழுதாய் விழுங்கியது அவர்களை
ஒரு ஆதிசேடனின் ஆதிகால பசியைப்போல...
இருட்டு துழாவிய அறைக்குள்
வெளிச்ச புள்ளியாய் கரைந்தனர் அவளும் அவனும்
இரை கிடைத்த சிலிர்ப்பில் அரவமாய் நெளிந்தது தனிமை ....
நேசத்தை உள்ளங்கையில் கைகுட்டையாக்கும் அவளும்
அன்பை பார்வையில் போர்வையாக்கும் அவனும்
இமைகளில் அவனை சுமந்தும்
தோள்களில் அவளை சாய்த்தும்
நிதானமாக தொலைத்தனர் முதன்முறையாக ...
மொழி புரியாத படத்தின் காட்சிகளை
மொழிப்பெயர்த்தது அந்த மௌனம் ...
அதி அற்புதமான அதிசயத்தில்
திளைத்துப்போனது அந்த மாலை நேரம் ....
மாயவலைக்குள் சிக்கிக்கொண்டவர்களை
விடுவிக்க நிர்பந்திக்கவில்லை
கதவில்லாத அந்த நுழைவு வாயில் ...
உயிரூட்டப்பட்ட வெளிச்சத்தில்
வெளியேறிய கூட்டம் கவனிக்கவேயில்லை
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
தனித்திருக்கும் அவர்களை ...
பார்வையால் முத்தமிட்ட அந்த சாலையில்
நடக்க ஆரம்பித்தனர்
விடிய தொடங்கும் பொழுதை நோக்கி ..
முழுதாய் விழுங்கியது அவர்களை
ஒரு ஆதிசேடனின் ஆதிகால பசியைப்போல...
இருட்டு துழாவிய அறைக்குள்
வெளிச்ச புள்ளியாய் கரைந்தனர் அவளும் அவனும்
இரை கிடைத்த சிலிர்ப்பில் அரவமாய் நெளிந்தது தனிமை ....
நேசத்தை உள்ளங்கையில் கைகுட்டையாக்கும் அவளும்
அன்பை பார்வையில் போர்வையாக்கும் அவனும்
இமைகளில் அவனை சுமந்தும்
தோள்களில் அவளை சாய்த்தும்
நிதானமாக தொலைத்தனர் முதன்முறையாக ...
மொழி புரியாத படத்தின் காட்சிகளை
மொழிப்பெயர்த்தது அந்த மௌனம் ...
அதி அற்புதமான அதிசயத்தில்
திளைத்துப்போனது அந்த மாலை நேரம் ....
மாயவலைக்குள் சிக்கிக்கொண்டவர்களை
விடுவிக்க நிர்பந்திக்கவில்லை
கதவில்லாத அந்த நுழைவு வாயில் ...
உயிரூட்டப்பட்ட வெளிச்சத்தில்
வெளியேறிய கூட்டம் கவனிக்கவேயில்லை
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
தனித்திருக்கும் அவர்களை ...
பார்வையால் முத்தமிட்ட அந்த சாலையில்
நடக்க ஆரம்பித்தனர்
விடிய தொடங்கும் பொழுதை நோக்கி ..
- நாகா
No comments:
Post a Comment