Monday, September 3, 2018

27-07-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 108 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
27-07-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 108
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
காற்றில் மிதக்க ஆரம்பித்த
அந்த அதிர்வலையில்
தொலைய ஆரம்பிக்கிறேன் ...
யாருமற்ற பொழுதுகளில்
உடன்வரும் ஞாபக சில்லுகளாய்
கொட்டி செல்கிறது தன்னை ....
செவிக் கதவு திறந்து
நிரப்பி சென்ற சத்தத்தில்
மூழ்குகிறேன் மெதுவாக ...
வாசனை நுகரும் அதன்
அத்துவான காட்டில் கூட்டிச்செல்லும்
வழித்துணையில் இளைப்பாறுகிறது இதயம் ....
தட்டானின் சிறகில்
காற்றில் தீட்டிய ஓவியமாக
அதன் உதிரா வண்ணம் எழுதுகிறது என்னை ...
கடலலை ரீங்காரத்தில்
கட்டுமரம் காதலாக ...
பூக்களை உடுத்தி கரையொதுங்கலாம்
நினைவுகளின் குழந்தையாக இசை...
- நாகா

No comments:

neelam enbathu song