RJ Naga
01 -06-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 73
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்பாவிடம் அடிக்கடி
கோபித்து கொள்வேன்
அம்மாவிடமும் அப்படித்தான் ...
காரணங்கள் முன்வைத்து
நியாப்படுத்திவிடுவேன் கோபங்களை ..
முருங்கை பூக்கள் உதிர்ந்த மரத்தடியில்
அணிலாகும் என் கோபம்
சிறுவெயிலில் நிழல் போர்த்திக்கொள்ளும் ...
அதிபட்ச டெசிபலில் ஒலிபரப்பாகும்
என் அலைவரிசையில்
தன் நேயர் விருப்பத்தை பதிவு செய்து செல்லும்
கோபங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் இப்போது ..
கதவு திறக்கும் நேரங்களில்
கதவிடுக்கில் மாட்டிக்கொள்ளும்
கோபத்தின் இயலாமையில்
களிம்பு தடவுகிறது காலம் ..
இப்போது கோபம் கடந்த வாழ்க்கையில்
கோபங்களை அலங்கார பொருட்களாய்
அடுக்கி வைத்த இடத்தில் இருந்து எட்டிப்பார்க்கிறது
கோபத்தின் இயலாமையில் கசியும் வியர்வை ...
கோபித்து கொள்வேன்
அம்மாவிடமும் அப்படித்தான் ...
காரணங்கள் முன்வைத்து
நியாப்படுத்திவிடுவேன் கோபங்களை ..
முருங்கை பூக்கள் உதிர்ந்த மரத்தடியில்
அணிலாகும் என் கோபம்
சிறுவெயிலில் நிழல் போர்த்திக்கொள்ளும் ...
அதிபட்ச டெசிபலில் ஒலிபரப்பாகும்
என் அலைவரிசையில்
தன் நேயர் விருப்பத்தை பதிவு செய்து செல்லும்
கோபங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் இப்போது ..
கதவு திறக்கும் நேரங்களில்
கதவிடுக்கில் மாட்டிக்கொள்ளும்
கோபத்தின் இயலாமையில்
களிம்பு தடவுகிறது காலம் ..
இப்போது கோபம் கடந்த வாழ்க்கையில்
கோபங்களை அலங்கார பொருட்களாய்
அடுக்கி வைத்த இடத்தில் இருந்து எட்டிப்பார்க்கிறது
கோபத்தின் இயலாமையில் கசியும் வியர்வை ...
- நாகா
No comments:
Post a Comment