RJ Naga
23-07-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 104
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு மழை நாளுக்கு மறுநாள்
நனைந்திருந்த தோட்டம் போல
குளித்திருந்தது எங்கள் வீடு ...
இன்னும் இலைகளில் இருந்து
உதிர்ந்து கொண்டிருக்கும் மழையின் மிச்சத்தில்
விளையாட ஆரம்பித்தது அணிலொன்று ...
தலைகுளித்த கூந்தலை
மடித்துக்கட்டமறந்த புது பெண்ணைப்போல
இளம் வெயிலில் மரத்தின் கிளை ஒன்றில்
யாருமில்லாமல் அசைந்தது ஊஞ்சல் ஒன்று...
அந்த வண்ணத்து பூச்சியின் கரையாத நிறத்தில்
கம்பீரமாய் தெரிந்தது நேற்றைய மழை ....
சாலைகளில் வாகன உபயத்தால்
ஓவியம் தீட்டிப்போன மழை நீரில்
முதல்முறையாக கவிதை புத்தகத்தின் கிழித்த தாளில்
மிதக்க ஆரம்பித்தது அந்த காகித கப்பல்....
தூறலாக வந்தும் ஊசியாக படர்ந்தும்
ஒரு நல்ல மழை தன் கேமிரா கண்களால்
படம்பிடிக்க தொடங்கியது சாலை ஓரத்தில்
குடியிருந்த வீடுகளை ...
மிதக்கும் மேகங்களை பிழிந்து கொடிகளில்
காயப்போட்டபடி அந்த காலை சலவை செய்தது ...
சொட்டுச்சொட்டாய் இதயம் புகும்
சில்லென்ற பொழுதில் நனைய ஆரம்பித்தது
மழைக்கு பிறகு வரும் நாட்கள்
அவனைப்போலவும் அவளைப்போலவும் .......
நனைந்திருந்த தோட்டம் போல
குளித்திருந்தது எங்கள் வீடு ...
இன்னும் இலைகளில் இருந்து
உதிர்ந்து கொண்டிருக்கும் மழையின் மிச்சத்தில்
விளையாட ஆரம்பித்தது அணிலொன்று ...
தலைகுளித்த கூந்தலை
மடித்துக்கட்டமறந்த புது பெண்ணைப்போல
இளம் வெயிலில் மரத்தின் கிளை ஒன்றில்
யாருமில்லாமல் அசைந்தது ஊஞ்சல் ஒன்று...
அந்த வண்ணத்து பூச்சியின் கரையாத நிறத்தில்
கம்பீரமாய் தெரிந்தது நேற்றைய மழை ....
சாலைகளில் வாகன உபயத்தால்
ஓவியம் தீட்டிப்போன மழை நீரில்
முதல்முறையாக கவிதை புத்தகத்தின் கிழித்த தாளில்
மிதக்க ஆரம்பித்தது அந்த காகித கப்பல்....
தூறலாக வந்தும் ஊசியாக படர்ந்தும்
ஒரு நல்ல மழை தன் கேமிரா கண்களால்
படம்பிடிக்க தொடங்கியது சாலை ஓரத்தில்
குடியிருந்த வீடுகளை ...
மிதக்கும் மேகங்களை பிழிந்து கொடிகளில்
காயப்போட்டபடி அந்த காலை சலவை செய்தது ...
சொட்டுச்சொட்டாய் இதயம் புகும்
சில்லென்ற பொழுதில் நனைய ஆரம்பித்தது
மழைக்கு பிறகு வரும் நாட்கள்
அவனைப்போலவும் அவளைப்போலவும் .......
- நாகா
No comments:
Post a Comment