Saturday, August 30, 2008

பயத்துடன் தான் புணரமுடிகிறது ........


ஒரு கோப்பையில்
உட்காரும் ஈயாக நானும்
ஆவிப்பறக்கும் தேநீராக நீயுமாக
பேசிக்கொள்கிறோம்....


எதோ ஒரு உதடு
தொட்டுவிடும் அவசரம்
முன்பைவிட கூடுதல் சிரத்தையாய்
விரட்டிவிடும் கையில்
தெரிந்ததில்லை இதுவரை நேசம்.....


எப்போதும் இல்லாத
பயத்துடன் தான்
புணரமுடிகிறது
நம்மையும் தாண்டி வீதியில்
விளையாடிக்கொண்டிருக்கலாம் நம் பால்யம்....


ஈரமண்ணில் கிளம்பிவந்த
மழைக்காலத்தின் கர்ப்பம்
மெல்ல மெல்ல கரைகிற போதுதான்
நீயும் நானும்
உருண்டு திரண்டு மீண்டிருந்தோம்.....


இப்போதெல்லாம்
மழைச் சத்தத்தில்
காதடைக்கும் நான் கதவடைப்பதில்லை.....
மகனுக்கு காகித கப்பல்களை
செய்துத்தந்தபடி மனைவி
எப்போதுமில்லாத குழந்தைத்தனத்துடன்!


No comments:

neelam enbathu song