Monday, August 11, 2008

சுட்டாச்சு சுட்டாச்சு ...............


அம்மாவால்
சுட முடிகிறது
தோசையை அழகாக....


அப்பாவின்
சட்டைப்பையில்
லாவகமாய்
சுட்டுவிடுகிறான் அண்ணன்
தனக்கான சில்லரைகளை......


யாரோ செலவழித்த
மூளையை
தனக்கானதாய்
சொல்லிக்கொண்டு சுட்டு
தந்துவிடமுடிகிறது
எல்லோராலும்
காதல் கவிதைகளை.....


சுடாமல் இருக்கிற
பொழுதுகளை
சுட்டிக்காட்டவும்
சுட வேண்டி இருக்கிறது ....

முதல் முறையாய்
வரலாறு
தங்கம்
கொடுத்து
சுட்டுகொண்டது.....


சுட்டவரெல்லாம்
கேட்டவர் இல்லை!
அபிநவ்
நீ சுடாமல் இருந்திருந்தால்
சும்மா கிடந்திருக்கும்
எங்கள் சமையலறை தோசைக்கல்!!!!!!

No comments:

neelam enbathu song