
வாசல் திறந்து
உள் நுழையும்திமிர்பிடித்த வெயில்!
அதிகப்பிரசங்கியாய்
தலை நீட்டும் நிழல்...
எல்லத்துளிகளிலும்
ஒளித்து
ஓய்ந்துப்போயிருக்கும்
நேற்றைய மழை!
பல்லிடுக்கில் சிக்கிய
பருக்கையை
எடுக்கும் போராட்டத்தில்
சிதறும் ரத்தத்துளி....
மூச்சிரைப்பில்
விளங்காத வாசனை!
உளிச்செதுக்கும்
சத்தத்தில்
கண்மூடிதூங்கும்
சிலை!
எதிர்வீடுஎன்றாலும்
ஜன்னல் திறக்க முடிவதில்லை
"அழைப்புமணி" ஒலிக்காதவரை!
No comments:
Post a Comment