Saturday, August 9, 2008

நானும் அவரும்!

அவரை

எனக்கு பிடித்திருந்தது
காரணமில்லாமல்
கோபித்து கொள்ளாத
அவரின் பெருந்தன்மையில்
உருவாகியிருக்கலாம் எங்கள் சிநேகம்.....!

கல் நிரப்பி
நீர் குடிக்கும் காகமாய்
தந்திரம் தெரியாத
அவரின் இயல்பின்
இடுப்புக்குக்கீழே
கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறேன்.......

எதற்க்காக என்பதான
எந்த புரிதலிலும்
அவருக்கான இருப்பு
நிலையாகவே இருந்தது என்னிடம்.....
வரும் போகும்போது
என்றில்லாமல்
எப்போதுமே
பிடித்தாய் இருந்திருக்கிறது
அவரின் முரட்டு சுபாவம்......

அந்த பேருந்தில்
அவரின் விசிலுக்கு
அடிபணிந்தது
பேருந்தும் பயணிக்கும் நானும்......
வந்துகொண்டிருக்கிறது
ஜன்னலுக்கு வெளியே
சில்லறை சத்தத்துடன்
சிலரின் பிடிவாதம்
நிற்காத வண்டியை சபித்தப்படி........

No comments:

neelam enbathu song