Tuesday, May 29, 2018

01 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 225
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அதென்னவோ பொட்டுகளை
வட்டமாக பார்த்தே பழகிவிட்டது மனசு ..
ஒற்றைரூபாய் நாணய அளவில்
சிரிக்கும் கீரைக்கார கிழவியின் பொட்டு
காலணா அளவிற்கு சிக்கனமாய்
இருக்கும் அம்மாவின் பொட்டு
தடயம் தேடி துப்பறியச்சொல்லும்
எதிர்வீட்டு மாமியின் பொட்டு ...
வட்டங்களை கடந்த வடிவ பொட்டுகளை
அக்காவிடம் பார்த்தேன் பிற்பாடு...
ஸ்டிக்கர் பொட்டுகளால்
நிரம்பியிருந்த குளியறையில்
பாம்பு பொட்டு பார்த்து அலறிப்போனேன் ...
நெற்றிக்கு மேலே புருவங்களுக்கு மத்தியில்
ஒட்டிக்கொள்ளப்படுகின்றன பொட்டுகள்...
வீட்டுக்கு வந்து செல்லும் சுமங்கலி பெண்களுக்கு
இன்றுவரை அம்மா தரும் குங்குமத்தில்
வட்டமாகத்தான் இட்டு கொள்ளப்படுகின்றன பொட்டுகள்...
ஒப்பனையில்லாவிட்டாலும் பொட்டில்லாத
அவள் நெற்றி ஏற்றிவிடுகிறது கோபத்தை எனக்குள்...
முத்தங்களால் இட்ட பொட்டுக்குள்
ஒட்டிக்கொண்டது என் உதடுகள் ...
வேண்டும் ண்ண வண்ண பொட்டுகளில்
கழுத்தை கட்டிக்கொள்ளும் மகளின்
உள்ளங்கையில் கொட்டிக்கொண்டிருந்தது
வெட்கத்தின் பொட்டு ஒன்று ...
- நாகா

No comments:

neelam enbathu song