Tuesday, May 29, 2018


Image may contain: bicycle, sky and outdoor

07 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 228
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாருமற்ற சாலையில்
ஒற்றை மிதிவண்டியில் நானும் தம்பியும் ...
பின்னிருக்கையில் நான்
முன்னிருக்கையில் அவன் ...
அப்பா வியர்வை வழிய மிதிப்பார்
முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் ...
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் ஈரம்
சலசலக்க ஆரம்பிக்கும் எங்கள் காதுகளில் ..
அரவமற்ற நிமிடங்களில்
தம்பியும் நானும் பாட ஆரம்பிப்போம் ..
பிற்பாடு சைக்கிள் பழகிய பிறகு
தம்பியை பின்னிருக்கையில் அமர்த்தி
மிதித்திருக்கிறேன்
எங்களுக்குள் ஓட ஆரம்பித்தது ஆறு...
கத்தரி வெயிலில் ஒரு நாள்
பாலத்திற்கு கீழே மிதிவண்டி தள்ளிக்கொண்டு
நடத்திருக்கிறேன்
முதல் காதலை பூக்க வைத்தவளுடன் ...
தனிமையில் நெடுநேரம் உரையாடிய
நடுநிசி இரவில் பேச தொடங்கியது அந்த நிலா ..
ஒரு மிதிவண்டியில் சிக்கி கொண்ட
ஒற்றை கால் கொலுசாய் இன்னும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த ஆறு
மனதில் பாலத்திற்கு கீழே
திருகாணி தொலைத்த காதலாக ......
- நாகா
PC : Aditya Ramanathan

No comments:

neelam enbathu song