Tuesday, May 29, 2018

18 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 235
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு நீல இரவில்
வெண்ணிற தேவதையாய்
அவளுடன் நடக்க தொடங்கினேன் ...
அவள் பயணங்களில்
ஒரு வழித்துணையாக என்னை
அனுமதித்த போது தொட்டு பார்க்கிறேன்
முளைத்திருக்கிறது சிறகுகள்...
சாலைகள் எங்கும்
அவளின் புன்னகை மின்மினிகள்...
விண்மீனின் நிழலாக
அந்த வனாந்திரம் அழைத்து செல்கிறாள்...
பனித்துளியில் ஒளிந்துகொண்டு
விளையாட அழைக்கும் ஆகாயத்தை போல
அவளை பார்க்கிறேன் ...
என் இமைகளில் புகுந்துகொண்ட
அவள் கனவுகளோடு உறங்குகிறது
என் தனிமையும் அவள் பிரியங்களும் .....
எனக்குள் புதைந்து
தொலைந்துபோகும் அவளை
ஒரு அகழ்வாராய்ச்சியாளனின்
மனநிலையோடுதான் அணுக வேண்டி இருக்கிறது ...
காதலும் இன்னபிறவுமான வாழ்க்கையில்...
- நாகா

No comments:

neelam enbathu song