Tuesday, May 29, 2018

25 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 238
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு தேநீர் கோப்பையும்
சில வேனிற் காலமும்
எனக்குள் அனல் மூட்டவே செய்கிறது
ஒவ்வொருமுறையும் ...
மழை துளியில் குட்டி குட்டி கங்குகள்
கத்தி கப்பல்களாய் மிதக்கிற போது
தேநீர் கோப்பையின் விளிம்பில்
தத்தளிக்கும் ஈயின் வாழ்வு போராட்டம்
எட்டி பார்த்து போகும் ...
பனிக்கட்டிகளை சாலையில் கொட்டி போகும்
நேசத்தின் பெரு வாழ்வு
ஆர்டிக் கனவை விதைத்து போகிறது…
வெடித்த வெள்ளரியாக
மனதின் குரல் சன்னமாய் ஒலிக்க
சலசலத்து ஓடுகிறது ஆறு ..
கரையெங்கும் பதுங்கி
தடயம் அழிக்கும் அலைகளில்
ஒரு கட்டுமரமாக மிதந்து செல்கிறது காதல்....
-நாகா

No comments:

neelam enbathu song