Tuesday, May 29, 2018

26 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 239
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குடை கவிழ்த்து
மழைப்பிடிக்கும் மகளின்
செல்ல விளையாட்டில் மேகமாகிறேன் நான் ..
வாளியில் நிரம்பிய அவளின் கடல்
என் காகித கப்பல்களை
கரைசேர்க்க போராடும் ...
நூல் அறுந்த காற்றாடி
பறந்து விழும் மொட்டைமாடி
படியேறிவரும் நிலவாக அவள்...
தரையெங்கும் மிதக்கும் ஆகாயத்தில்
விண்மீன்கள் பொறுக்குவாள் அவள்
பின்தொடர்வேன் ஒரு தூண்டில் காரனாய் நான் ....
கூடு சுமந்து பறக்கும்
பறவையின் பார்வையில்
அந்த மரத்தின் நிழல் ஒட்டிக்கொண்டிருந்தது ..
பறவையின் நிழல் விழுந்த நிலத்தில்
உணவு துணுக்கை இழுத்தபடி
எறும்புகள் என்னை போல ...
மகளின் புன்னகையில்
இருட்டுக்கு வெள்ளையடித்துக்கொண்டிருந்தேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song