Tuesday, May 29, 2018

12 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 231
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
புறாவின் கால்களில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
எழுத நினைத்த கடிதத்தின் சொற்கள் ...
சிதறிய தானியங்களை கொத்தும்
அதன் அலகுகளில்
தட்டு பட்டு போகின்றன சில...
வானத்தின் வார்த்தைகளில்
ஒளிந்து கொண்டிருக்கும் மேகத்தின்
துண்டொன்றில் மோதி போகிறது
மூங்கிலில் நுழைந்த காற்று ..
அதன் சிறகசைப்பில் சிதறும்
நட்சத்திரங்களை கொத்த ஆரம்பிக்கின்றன
வண்ணத்து பூச்சிகள் ..
ஜன்னல் வந்து அமரும் புறாவின்
கால்களை கவனித்தபடி
நீ மௌனமாய் நிற்கிறாய் ஒரு சிலையை போல ..
உன் பார்வையை சுமந்த படி
என் வலசை வரும் பறவையின்
கடிதத்தில் தொலைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு வரி விடாமல் வாசித்தபடி நான்
வெற்று காகிதத்தில்
நிரம்பி இருக்கிறது உன் அன்பு ......
- நாகா

No comments:

neelam enbathu song