Tuesday, May 29, 2018

08 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 229
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த வெற்றிடத்தை
இட்டு நிரப்ப
பிரியம் காட்டுகிறது காற்று ....
ஓடைக்குள் ஒளிந்துகொண்டு
ஒற்றை இலையில் பயணிக்கிறது ஈரம்
துளைகளில் வெளியேறும்
இசையில் நனைந்து நிற்கிறது மூங்கில்...
வெயில் தூரிகை தீட்டும்
வன ஓவியத்தில் ஆற்றின் நிழல்....
காடு கடக்கும் காற்றில்
மிதந்து செல்லும் பூக்களின்
மேனியெங்கும் இசை வியர்வை ...
குடைபிடிக்கும் மேகத்தில் இருந்து
விழ ஆரம்பிக்கிறது இந்த கவிதை ...
-நாகா

No comments:

neelam enbathu song