04 -03-2018
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 242
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யானையை தூக்கி கொண்டு
காகம் ஒன்று பறந்து கொண்டிருந்தது ...
நீல காகத்தின் பச்சை அலகில்
யானையின் சிவப்பு ஒட்டிக் கொண்டிருக்க
மகளின் பிஞ்சு விரல்களில்
தொலைந்திருந்தது அந்த தூரிகை ...
யானைகள் பறக்கவும்
சிட்டுக்குருவிகள் நடந்து போகவும்
வரைய ஆரம்பிக்கிறாள் ..
ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளிருந்தும்
வெளியேற ஆரம்பித்தது பறவைகள் ....
எப்போதாவது என்னையும் வரைய
அவள் ஆர்வம் காட்டுவாள் ...
மாடு மேய்த்து கொண்டிருந்தது நிலா
விண்மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும்
அந்த புல்வெளியெங்கும்
தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது
கயிறு அறுந்த களிறு ஒன்று...
அவளின் தோட்டம் பச்சையாக இல்லாமல்
பூக்க ஆரம்பித்தது நிறமற்ற நிறத்தில் ஒரு பூ ....
காகம் ஒன்று பறந்து கொண்டிருந்தது ...
நீல காகத்தின் பச்சை அலகில்
யானையின் சிவப்பு ஒட்டிக் கொண்டிருக்க
மகளின் பிஞ்சு விரல்களில்
தொலைந்திருந்தது அந்த தூரிகை ...
யானைகள் பறக்கவும்
சிட்டுக்குருவிகள் நடந்து போகவும்
வரைய ஆரம்பிக்கிறாள் ..
ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளிருந்தும்
வெளியேற ஆரம்பித்தது பறவைகள் ....
எப்போதாவது என்னையும் வரைய
அவள் ஆர்வம் காட்டுவாள் ...
மாடு மேய்த்து கொண்டிருந்தது நிலா
விண்மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும்
அந்த புல்வெளியெங்கும்
தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது
கயிறு அறுந்த களிறு ஒன்று...
அவளின் தோட்டம் பச்சையாக இல்லாமல்
பூக்க ஆரம்பித்தது நிறமற்ற நிறத்தில் ஒரு பூ ....
-நாகா
No comments:
Post a Comment