Tuesday, May 29, 2018

16 -01-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 217
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முன்வாசல் வழியாக உள் நுழைகிறது
ஒரு செல்ல பூனையாய் காதல்...
தோட்டம் கடந்து வந்த அதன் உடலெங்கும்
ஒட்டிக்கிடந்தது பூக்களின் வாசனை...
நேற்றைய பனித்துளியை சுமந்துவந்த அது
முற்றம் எங்கும் கொட்டிப் போகிறது ஒரு மேகத்தை போல ...
உள்ளங்கை தொட்டு மெல்ல
என்னை ஏந்திக்கொண்ட அதன் கதகதப்பில்
வெளுக்க ஆரம்பிக்கிறது என் ஆகாயம் ...
அதன் கால்களை கட்டிக்கொண்டு
வளைய வருகிறேன் ஒரு சிறுவெயிலைப்போல நான்...
பூனைக்கு இன்று பிறந்த நாள்
காதல் பிறந்திருக்கிறது என்கிறேன்
அதன் கண்களில் தெரியும் என் பிம்பத்தில்
அசடுவழிகிறது பூங்கொத்துகளுடன்
அணைத்துக்கொள்ளும் அதன் நேசம் ..
-நாகா

No comments:

neelam enbathu song