Tuesday, May 29, 2018



25-04-2018 
புதன்
ஒற்றையடிப்பாதை : 275
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நான் கடல் வாங்க சென்ற நேரம் 
அவள் மீன்கள் வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தாள்....
கரையொதுங்கிய அலைகளுடன் 
பேச ஆரம்பிக்கிறேன் நான்...
நுரை பூக்களில் மிதக்க ஆரம்பித்தது வானம்
கண்ணாடி தொட்டிக்குள் ...
நீந்த ஆரம்பித்த கடலில் 
சிதறிய துளிகளாக துவண்டு விழுந்தது மீன்கள்...
கொசுறாக கிடைத்த மீன்களுடன் 
புன்னகைக்கிறாள் கடலுடன் வந்த 
என்னை ஏளனமாய் பார்த்தபடி ...
கடலுக்கு கொசுறு வாங்கி வராத 
என் தந்திரமில்லா வியாபாரத்தில் 
தூண்டில் போட ஆரம்பித்தாள்...
அதென்னவோ அவள் தூண்டிலில் மட்டும் 
சிக்கிக் கொள்கிறது மீன்கள் ...
மீன்களை பிடித்தபடி கரையேறும் கடலை 
பரிதாபமாக பார்க்கவேண்டிய நிலமை 
இப்போது உங்களுக்கு ...
- நாகா

No comments:

neelam enbathu song