Tuesday, May 29, 2018

04 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 226
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சந்திரபாபுவாக தான் இருந்தேன்
அவள் வந்த பிறகுதான் தெரிந்தது
ஒரு ஜெமினிகணேசன் சத்தமில்லாமல் உள்ளிருந்தது..
கத்தி சண்டையில் லாவகமாக மக்கள்திலகமும்
கம்பு சண்டையில் பிடிவாதமாக நடிகர் திலகமும்
மாறிமாறி வந்து போகின்றனர்
நம்பியாராகிறது என் காதல் அடிக்கடி ...
சுவரொட்டிகளில் சிரிக்கும்
பகல் நேர காட்சிகளாக அவள் வந்து போகிற போது
இடைவேளைகளில் மத்திய வெயிலாய்
எட்டிப்பார்க்கும் அணிலாகிறேன் நான் ...
ஒளியும் ஒலியும் நாட்களில்
கூடுதலாக ஒலித்த ஒற்றை பாடலின்
வருகையை போல அமையும் அவள் புன்னகை ..
நேயர் விருப்பங்களில் என் பெயரில் அவளையும்
அவள் பெயரில் நானும் ஒளிந்து கொள்ளும்
கண்ணாமூச்சி நிமிடங்கள்
இலங்கை வானொலி பொங்கும் பூம்புனலில்
நீராடிக் கொண்டிருக்கும் ...
பயாஸ்கோப்பில் ரீல் அறுந்துபோகும் வரை
ஓட ஆரம்பிக்கிறது காட்சிகள் ...
ஒரு பார்வையாளனாக
பார்த்துக் கொண்டிருக்கிறது காலம்.
- நாகா

No comments:

neelam enbathu song