Tuesday, May 29, 2018

17 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 218
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வீசி செல்கிறது ஆகாயம்
நிலவின் துணுக்குகளில் சிதறுகிறது அறை...
சாளரம் எங்கும் ததும்பும் பௌர்ணமி
நனைத்து போகும் நினைவில்
துவட்டிச்செல்கிறாள் செல்லமாக...
ஈர கூந்தலில் சொட்டுச்சொட்டாய்
வரைகிறது தூரிகையில்லாமல் காதல்...
எனக்காக விழிக்கும் அவள்
தனக்காக எழுப்புகிறாள் என்னை...
போர்வைக்குள் இருந்து உதறி எழுகிறது
ஒரு சிறு மேகமென கவிதை ...
ஒன்றாக பறக்க ஆகாயம் தேடும்
அவள் சிறகில் உருவாகிறது எனக்கான கூடு..
என் தனிமை பயணத்தில் துணையாக
தொடர்கிறது அவள் அன்பு ...
உதடு திறக்க வார்த்தைகளாக அவள்
இதயம் திறக்கிறாள் துடிப்பாக நான் ..
அந்த சிறு வீட்டுக்குள் இருந்து
வானம் பார்க்கிறோம் ...
ஒரு நட்சத்திரமாக எங்களை
கவனித்து கொண்டிருந்தது அந்த பூமி ...
- நாகா

No comments:

neelam enbathu song