Tuesday, May 29, 2018

28 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 240
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஆடுகளும் ஆடு நிமித்தமுமாய்
ஒரு கவிதை...
மேய்ச்சலுக்கு போன ஆடுகள்
வழிதவறி போய் கசாப்பு கடை நோக்கி ...
வெள்ளாடுகளில் எப்போதாவது
சேர்ந்து விடுகின்றன சில கருப்பு ஆடுகள் ..
மேய்ப்பனை நம்பி பின்தொடரும் பயணம்
மந்தைகளில் முடிவதில்லை எப்போதும்...
செம்மறிகளை தேடி
தலை சாய்க்கும் கிளைகளில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன துரட்டிகள் ..
தழை பறித்து போடும் விரல்களில்
மலை சரிவுகளும் பள்ளத்தாக்குகளும் ...
ஒரு அனாமதேய சந்திப்பில்
புல் மேய ஆரம்பித்தன ஆடுகள்...
பட்டிகளில் அடைந்திருக்கும்
ஆட்டுக்கூட்டத்தில் உள் நுழைந்த
ஒற்றை அரவத்தின் அவசரம்
சிதறி ஓட வைக்கின்றன ஆடுகளை...
- நாகா

No comments:

neelam enbathu song